என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கோ பூஜை"
- செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.
- அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பல்லடம்:
பல்லடம் காந்தி ரோட்டில் செல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.
பின்னர் திருப்பணி செய்ய பாலாலய பூஜை நடைபெற்றது.இதை தொடர்ந்து சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு, அருகே உள்ள பொன்காளியம்மன் கோவிலில், தனி அறையில் பாதுகாப்புடன் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கோவில் கட்டுவதற்கு முன் அங்கு பாசிப்பயிர், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து அதனை கால்நடைகளை விட்டு மேய விட வேண்டும் என்பது ஐதீகம். இதன்படி செல்வ விநாயகர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தில் மாடுகள், மற்றும் குதிரை ஆகியவற்றை விளைந்த தானிய பயிர்களை மேய விட்டனர்.
இதுகுறித்து திருப்பணி குழுவினர் கூறுகையில், செல்வ விநாயகர், பால தண்டபாணி திருக்கோவில் கட்டுவதற்காக அரசின் ஸ்தபதியிடம் கட்டுமான வரைபடம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கட்டுமான வரைபடம் வந்தவுடன் அதனை அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் திருப்பணிகள் துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.நீண்ட காலமாக திருப்பணி நடைபெறாமல் இருந்த செல்வ விநாயகர், தண்டபாணி கோவிலில் தற்பொழுது திருப்பணிகள் நடைபெறுவது பல்லடம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
- ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.
பெருமாநல்லூர்:
திருப்பூர் மாவட்ட கோ சேவா சமிதி சார்பில் மாதம் ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் மங்கலம் ரோடு பெரியாண்டிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
ஆடி வெள்ளியில் நடைபெறும் புனிதமான இந்த கோ பூஜையில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு கோமாதா அருளைப் பெற வேண்டும் என்று திருப்பூர் ஜில்லா கோ சேவா சமிதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிறவிப் பிணி தீர்க்கும் கோ பூஜை... வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்
- ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.
மாட்டுப்பொங்கல்/திருவள்ளுவர் தினம் 16.1.2023, தை 2 , (திங்கட்கிழமை)
இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.
பசுவின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாக கருதுகின்றனர்.
இப்பசுக்களில் மும்மூர்த்திகள் மட்டுமல்ல சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். மாட்டுப்பொங்கல் அன்று கோமாதா எனப்படும் பசுவை பூஜை செய்து வழிபட்டால் பிறவிப் பிணி தீரும். ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.
கடும் உழைப்புக்கும் உழவுக்குத் துணை செய்த கால்நடைகளை ஆராதிக்கும் நாள். உழவுக்கு உதவிய கால் நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல். திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கால்நடைகளை சுத்தப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிக்க வேண்டும்.
மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்து சர்க்கரை பொங்கல் படைத்து கோ பூஜை செய்வது சிறப்பு.மாடுகளை வணங்கி விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுக்க வேண்டும். தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல் மஞ்சள் நீர் தெளிப்பது , ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும்.
கோ பூஜை செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.தினமும் கோபூஜை செய்வது சிறப்பு. தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள்.சகல ஐஸ்வர்யத்தையும் அள்ளித்தரும் கோ பூஜையை வருடம் ஒருமுறையாவது மாட்டுப்பொங்கல் அன்று செய்து வரவேண்டும்.
வருடத்திற்கு ஒருமுறையாவது பசுவை வீட்டிற்கு அழைத்து அதற்கு மஞ்சள்,குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை தானியங்கள் சாப்பிட கொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும்.பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிட்சம் கிடைக்கும்.உயர் ஜாதி பசுவை கன்றுடன் ஸ்ரீசுக்தம் சொல்லி கோபூஜை செய்து, தானம் செய்தால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.
பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியைதொட்டு வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் விலகும். இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார்.
- கோ சாலையில் தினம் தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோ பூஜை நடைபெறுகிறது.
- பித்ரு தோஷம், பிரம்ம தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம்.
திருப்பதி அலிபிரி அருகே பக்தர்கள் நடைபாதையாக திருமலைக்கு செல்லும் இடத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கோசலை அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி, ஏகாதசி அன்று திறக்கப்பட்டது.
கோ சாலையில் ஓங்கோல், அல்லி காரு, கிர், ஹாசிவாதா, காங்கேயன், காங்கேஜ், ராயிடி என 7 வகையான பசுக்கள் உள்ளன.
கோ சாலையில் தினம் தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோ பூஜை நடைபெறுகிறது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரை கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. கோ பூஜையில் கலந்து கொண்டால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.
தோஷங்கள் நீங்கும். மேலும் பித்ரு தோஷம், பிரம்ம தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம். பூஜையில் கலந்து கொள்ள ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். தினமும் கோ பூஜையில் கலந்து கொள்கின்றனர்.
மேலும் அங்குள்ள பசுக்களுக்கு துலாபாரம் மூலம் எடைக்கு எடையாக புல் வழங்கி வருகின்றனர்.
கிரகப் பிரவேசத்தில் கோ பூஜை செய்வார்கள். மணிவிழா நடைபெறும் போதும், கணபதி ஹோமம் செய்யும் பொழுதும் கோ பூஜை செய்யப்படும்.
பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது. முன்பு அரசர்களின் ஊர்வலங்களில், பசுதான் முதலில் செல்லும். அதிகாலையில் பசுவை தரிசனம் செய்தால், எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பசு வழங்கும் ஐந்து பொருட்கள்:- பால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் ஆகும். இந்த ஐந்தும் கலந்த கலவையே சக்தி பெற்ற ‘பஞ்சகவ்யம்’ என்று அழைக்கப் படுகிறது. சிரவண சடங்குகளில் பஞ்சகவ்யம் கொடுக்கப்படும். வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த இடத்தில் பஞ்சகவ்யம் தெளிக்கப்படும்.
கர்ப்பம் தரித்த பெண்கள் 3-ம் மாதத்தில் இருந்து பஞ்சகவ்யம் சாப்பிடுவார்கள். புதிதாக வாங்கும் ஆடைகளை பசுவின் முதுகில் வைத்து வழிபட்டு விட்டு, பிறகு அணிந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். நோயுற்ற குழந்தைகளின் முகத்திற்கு எதிரே, பசுவின் வாலை 3 முறை சுற்றிக் காட்டினால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. பசு பால் வழங்குவதில் இருந்து 11-வது நாள் வரும் பாலை, அனைவருக்கும் இலவசமாக வழங்கினால், அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்